Last Updated : 19 Jun, 2020 05:15 PM

 

Published : 19 Jun 2020 05:15 PM
Last Updated : 19 Jun 2020 05:15 PM

கரும்பு விவசாயிகளுக்கு விலையாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கொடுத்திருக்கிறோம்: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

உத்தரப் பிரதேச மாநில கரும்பு விவசாயிகள் 47.20 லட்சம் பேருக்கு 2017-2020-ல் விலையாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கொடுத்திருக்கிறோம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “2014-17 காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு விலையாக அளித்த ரூ.53,367 கோடியை விட கடந்த 3 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு அளித்த தொகை ரூ.46,633 கோடி அதிகம்.

ரூ.2012-2017 காலக்கட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விலையான ரூ. 95,215-ஐ விட ரூ.4,785கோடி அதிகம்.

கரோனா பெருந்தொற்றினால் வர்த்தகங்கள், கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டன. விவசாயிகள் நலன் கருதியே கரும்பு சப்ளை தொய்வில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

இந்த 2019-20-ல் உ.பி. சர்க்கரை ஆலைகள் 1,116 லட்சம் டன்கள் கரும்புகளிலிருந்து 126.5 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. இதுதான் உ.பி. வரலாற்றில் அதிகமான சர்க்கரை உற்பத்தியாகும்.” என்றார் யோகி ஆதித்யநாத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x