Published : 19 Jun 2020 04:35 PM
Last Updated : 19 Jun 2020 04:35 PM
லடாக்கில் சீன தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிக்கணக்கானோர் திரண்டனர்.
மேற்குவங்க மாநிலம் பிர்புகும் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜேஷ் ஓரங்கும் கல்வான் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
#WATCH Sepoy Rajesh Orang who lost his life in action in #GalwanValley, Ladakh, being laid to rest in Birbhum, West Bengal pic.twitter.com/5OXVQKPqU5
— ANI (@ANI) June 19, 2020
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.
#WATCH Bihar: Huge crowds gather to pay last tributes to Sepoy Jai Kishor Singh at his native village in Vaishali. He lost his life in action in #GalwanValley on June 15-16. pic.twitter.com/Zf4ZvhF43D
— ANI (@ANI) June 19, 2020
இதுபோலவே பிஹார் மாநிலம் வைஷாலியைச் சேர்ந்த வீரர் ஜெய் கிஷோர் சிங் இறுதிச் சடங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT