Published : 16 Jun 2020 08:07 PM
Last Updated : 16 Jun 2020 08:07 PM

கேரளாவில் இன்று 79 பேருக்குக் கரோனா: 16 இடங்கள் ஹாட் ஸ்பாட் பட்டியலில் இருந்து நீக்கம்; சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று புதிதாக 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 13 பேர், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேர், பத்தனம்திட்டா மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா 6 பேர், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 4 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 2 பேர் இந்த நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

புதிய நோய்த்தொற்றுள்ளவர்களில், 47 பேர் பிற நாடுகளிலிருந்து (குவைத் -23, ஐக்கிய அரபு அமீரகம் -12, கத்தார் -5, ஓமன் -3, சவுதி அரேபியா -2, பஹ்ரைன் -1 & தஜிகிஸ்தான் -1) மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 26 பேர் (மகாராஷ்டிரா) -13, தமிழ்நாடு -5, டெல்லி -3, மேற்கு வங்கம் -2, கர்நாடகா -1, குஜராத் -1 & ஒடிசா -1) கண்டறியப்பட்டுள்ளனர். முதன்மைத் தொடர்பு மூலம் ஐந்து பேரும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இரண்டு பேரும், மலப்புரம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார ஊழியருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரோனா நோய் சிகிச்சையில் இருந்த 60 நோயாளிகள் இன்று நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 நோயாளிகள், பாலக்காடு மாவட்டத்தில் 9 பேர், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர், ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேர், கோட்டயம் மாவட்டத்தில் தலா 4 பேர், பத்தினம்திட்டா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இருந்து தலா 3 நோயாளிகள், எர்ணாகுளம் மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் தலா ஒரு நோயாளி நோயிலிருந்து மீண்டவர்கள் ஆவர். மேலும் 1,366 பேர் இந்த நோய்க்கான சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,22,143 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில், 1,20,157 பேர் தங்கள் வீட்டில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தலில் கண்காணிப்பில் உள்ளனர், 1,986 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 210 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,003 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை, 1,18,893 நபர்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 4,081 மாதிரிகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது தவிர, சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக சுகாதாரப் பணியாளர்கள், விருந்தினர் தொழிலாளர்கள், சமூக அக்கறையுள்ளவர்கள் போன்ற முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 32,534 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் 31,093 மாதிரிகள் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், 1,57,117 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு இடம் இன்று கேரளாவில் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 16 இடங்கள் ஹாட் ஸ்பாட் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் 110 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன’’.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x