Last Updated : 16 Jun, 2020 05:10 PM

 

Published : 16 Jun 2020 05:10 PM
Last Updated : 16 Jun 2020 05:10 PM

கரோனா வைரஸ் | நாளொன்றுக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன: சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை 59 லட்சத்து 21 ஆயிரத்து 69 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை நாளொன்றுக்கு 3 லட்சம் மாதிரிகள் சோதிக்கும் வகையில் திறன் மேம்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை வருமாறு:

கரோனா வைரசைக் கண்டுப்பிடிப்பதற்கான மாதிரிகள் பரிசோதனையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 3 லட்சம் கரோனா சாம்பிள்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

மொத்தமாக இதுவரை 59 லட்சத்து 21 ஆயிரத்து 69 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 935 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தேதி வரை 907 பரிசோதனைக் கூட வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு சோதனைக்கூடங்கள் 659, தனியார் சோதனைக் கூடங்கள் 248.

நாட்டில் ஆர்டி-பிசிஆர் அடிப்படையிலான சோதனைச் சாலைகள் 534 இயங்கி வருகின்றன, இதில் அரசு சோதனைக்கூடங்கள் 347, தனியார் 187.

டெல்லியில் நாளொன்றுக்கு 17,000 சாம்பிள்களை சோதிக்கக் கூடிய வகையில் 42 லேப்கள் இயங்கி வருகின்றன.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதியான கன்டெய்ன்மெண்ட் மண்டலங்களில் ரேபிட் ஆன்ட்டிஜென் சோதனைகள் பயன்படுத்தப்படலாம்.

Q COVID-19 ஆன்ட்டிஜென் கண்டுபிடிப்புச் சோதனைக் கருவியின் மூலம் 15 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும். இதனால் கரோனா நோயை விரைவில் கண்டுப்பிடிக்க முடிகிறது. சாம்பில் சேகரிப்பு இடத்தில் ஒரு மணி நேரத்தில் ஆன்ட்டிஜென் டெஸ்ட் சோதனை நடத்தப்பட முடியும்.

மேலும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த செயல்பட வேண்டும். இதில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ஒடிசா, குஜராத், உ.பி, ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, ம.பி. ஆகிய மாநிலங்கள் சீரிய முயற்சிகள் எடுத்துள்ளன.

இந்தியாவில் தற்போது 1,53,178 பேர் கரோனாவுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 1,80,013 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x