Last Updated : 16 Jun, 2020 11:15 AM

 

Published : 16 Jun 2020 11:15 AM
Last Updated : 16 Jun 2020 11:15 AM

இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு: 10 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு 


இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10ஆயிரத்து 667 பேருக்கு பாஸிட்டிவ் உறுதி ெசய்யப்பட்டுள்ளது, 380 பேர் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கரோனா வைரஸால் இதுவரை நாட்டில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லடசத்து 43 ஆயிரத்து 91 ஆக அதிகரி்த்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 12 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சையில் உள்ளனர்

கரோனாவுக்கு கடந்த 24மணிநேரத்தில் 380 பலியாகியதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,900 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 52.46 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 178 பேரும், டெல்லியில் 73 பேரும், தமிழகத்தில் 44 பேரும் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 28 பேர், ஹரியாணாவில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், ராஜஸ்தானில் 9 பேர், மத்தியப்பிரதேசத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

ஆந்திரா, பஞ்சாபில் தலா 4 பேர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகாவில் தலா 3 பேர், தெலங்கானாவில் 2 பேர், பிஹார், சண்டிகர், இமாச்சலப்பிரதேசம், கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 4,128 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,505 ஆகவும், டெல்லியில் உயிரிழப்பு 1,400 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 465 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 187 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 399 ஆகவும், ஆந்திராவில் 88 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 89 பேரும், பஞ்சாப்பில் 71 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 62 பேரும், ஹரியாணாவில் 100 பேரும், பிஹாரில் 40 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 20 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 24 பேரும், அசாமில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 56,049 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 504 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 25,344 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 42,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,427 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,664 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 12,981 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,935 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13,615 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 11,494 பேரும், ஆந்திராவில் 6,456 பேரும், பஞ்சாப்பில் 3,267 பேரும், தெலங்கானாவில் 5,193 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5,220 பேர், கர்நாடகாவில் 7,213 பேர், ஹரியாணாவில் 7,722 பேர், பிஹாரில் 6,650 பேர், கேரளாவில் 2,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,175 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 4,055 பேர், சண்டிகரில் 354 பேர் , ஜார்க்கண்டில் 1,763 பேர், திரிபுராவில் 1,086 பேர், அசாமில் 4,158 பேர், உத்தரகாண்டில் 1,845 பேர், சத்தீஸ்கரில் 1,756 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 556 பேர், லடாக்கில் 555 பேர், நாகாலாந்தில் 177 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 95 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 117 பேர், சிக்கிமில் 68 பேர், மணிப்பூரில் 490 பேர், கோவாவில் 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x