Published : 16 Jun 2020 08:54 AM
Last Updated : 16 Jun 2020 08:54 AM
நேபாளத்துடன் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சில பகுதிகளையும் சேர்த்து நேபாளம் உருவாக்கியுள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்துக்கான மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி மூலம் நேற்று பேசியதாவது:
இந்தியா - நேபாளம் இடையிலான உறவு வரலாற்று, கலாச்சார ரீதியானது மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே உறவு உள்ளது. இதைஇந்தியா மறக்காது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உலகின் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலேக் கணவாய் வரைநமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்தியா சாலை அமைத்துள்ளது. இந்த சாலை அமைத்தது தொடர்பாக நேபாள மக்களுக்கு தவறான புரிதல் இருந்தால் அந்நாட்டுடன் பேசுவோம். நேபாளத்துடன் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். நேபாளம் குறித்து இந்தியர்களுக்கு எந்த கசப்புணர்வும் இல்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT