10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி புரிந்த உள்ளூர் பாஜக பிரமுகர் சிக்கினார்: சத்திஸ்கர் போலீஸ் அதிரடி

போலீஸ் உயரதிகாரி அபிஷேக் பல்லவ்.
போலீஸ் உயரதிகாரி அபிஷேக் பல்லவ்.
Updated on
1 min read

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு உதவிபுரிந்ததாக உள்ளூர் பாஜக பிரமுகர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜகத் புஜாரி என்பவர் உள்ளூர் பாஜக பிரமுகர், இவரும் அந்த இன்னொரு நபரும் நக்சல்களுக்கு ட்ராக்டர் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டனர்

2004-ல் உருவான சிபிஐ-மாவோயிஸ்ட் உருவாக்கத்தில் மக்கள் போர்ப்படை மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் ஆகியோர் அடங்கிய குழுதான் மாவோயிஸ்ட்கள் என்று அழைக்கப்படுகின்றனர் இவர்கள் பல்வேறு மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருபவர்கள்.

இவர்கள் ஒடிசா, ஜார்கண்ட், பிஹார், சத்திஸ்கர் மாநிலத்தில் 10 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சத்திஸ்கர் மாநில போலீஸ் உயரதிகாரி அபிஷேக் பல்லவ் கூறும்போது, “இன்பார்மர்கள் மூலம் உள்ளூர் பாஜக பிரமுகர் ஜகத் புஜாரி நக்சல்களுக்கு உதவி செய்து வருவது எங்களுக்குத் தெரியவந்தது, அவர் செயல்பூர்வமான உறவில் நக்சல்களுடன் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

நக்சல்களுக்கு ட்ராக்டர் வாங்கித் தருவதில் ஜகத் உதவி புரிந்துள்ளார். ஜகத் புஜாரி கடந்த 10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. ” என்றார்.

நக்சல்களுக்கு உதவி புரியும் மேலும் சிலருக்கு வலை விரித்துள்ளதாக பல்லவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in