Published : 14 Jun 2020 05:11 PM
Last Updated : 14 Jun 2020 05:11 PM

கரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து வரும்: நிதின் கட்கரி நம்பிக்கை

கரோனாவுக்கு விஞ்ஞானிகள் விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.


பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் இணையதளம் வாயிலாக நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

‘‘கரோனா தொற்று பிரச்சினை நீண்ட காலத்திற்கு நீடிக்காது. நமது விஞ்ஞானிகளும், மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். கரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்கள் கவலைபட வேண்டாம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x