Published : 14 Jun 2020 08:48 AM
Last Updated : 14 Jun 2020 08:48 AM

வாரிசு அரசியல் குடும்பத்திலிருந்து சகிப்புத்தன்மை பாடம் படிக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி மீது பாஜக தாக்கு

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கரோனாவை கையாளுதல், பொருளாதாரம் ஆகியவைப் பற்றி வெளிநாட்டு நிபுணர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் சமூகவலைத்தளங்களில் உரையாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

தொடர்ச்சியாக கரோனா லாக்டவுன் பயனற்று போயுள்ளது, என்றும் சகிப்பின்மை என்பது அறவே இல்லை என்றும் அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலருடன் பேசி வருகிறார். அப்போது கலந்துரையாடும் போது நம் நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அவர் பேசுகிறார்.

வாரிசு அரசியலை முன்னிலைப் படுத்தும் குடும்பத்தினரிடமிருந்து நாட்டின் சகிப்புத்தன்மை குறித்து நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை.

என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x