Published : 09 Jun 2020 08:33 PM
Last Updated : 09 Jun 2020 08:33 PM
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு மாநிலங்கள் கோரிக்கை விடுத்த 24 மணிநேரத்திற்குள் சிறப்பு ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘ மாநிலங்களுக்குத் தேவைக்குத் தகுந்தபடி புலம்பெயர் தொழிலாளர்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடரவுள்ளது.
இதுவரை, 4347க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் இந்திய ரயில்வே சுமார் 60 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் இலக்கு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளது. 2020 மே 1 முதல் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாநிலங்கள் தங்கள் கோரிக்கையை சமர்பித்த 24 மணி நேரத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவை அளிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் அனைத்து மாநிலங்களுக்கும் மே 29 மற்றும் ஜூன் 3 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இதனை மீண்டும் வலியுறுத்தி அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT