Published : 08 Jun 2020 07:09 AM
Last Updated : 08 Jun 2020 07:09 AM
கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது.
இவர்கள் தங்கள் வீடுகளுக்கும்செல்ல முடியாமல், வெளியிலும்செல்ல முடியாமல் தொடர்ந்துகரோனா வார்டில் பணியாற்றுவதால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மருத்துவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், பணியிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.
இதனை அறிந்த பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம், கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு புதுவிதமான சிகிச்சை முறையை பரிந்துரை செய்துள்ளது. அதாவது மருத்துவர்கள் கரோனா வார்டில் பணி நேரம் முடிந்தவுடன் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆட வேண்டும். இதனை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று பணி நேரம் முடிந்தவுடன் ஆண் மற்றும்பெண் மருத்துவர்கள் திரைப்பட பாடல்களுக்கு மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர். இதனால் தங்களது மன அழுத்தம் சற்று குறைந்து, உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்தி, தமிழ், கன்னடம்உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட பாடல்களுக்கு மருத்துவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT