Published : 07 Jun 2020 07:22 PM
Last Updated : 07 Jun 2020 07:22 PM
சீனாவில் பாரம்பரிய மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பினாலும் அதற்காக விலங்குகளின் உடல் பாகங்கள் தேவை அதிகரிப்பினாலும் இந்தியாவில் விலங்குகளை கொடூரமான முறையில் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதாக உத்தரப் பிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, “நாட்டில் விலங்குகள் மீதான தாக்குதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மாறியுள்ளது. விலங்குகளின் உடலுறுப்புகளுக்கான தேவை சீனாவில் அதிகரித்துள்ளது. அவர்கள் இவற்றிலிருந்து பாரம்பரிய மருந்துகளை தயாரிக்கின்றனர். சீனாவில் தங்கத்தை விட சிங்கத்தின் விலை அதிகம். ஆகவே சீனாவின் பெரிய கும்பல் ஒன்று இதன் பின்னணியில் உள்ளது.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக ஏகப்பட்ட சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன. தண்டனை 3 ஆண்டுகள் ஆகும். 1986-ல் போடப்பட்ட சட்டம் விலங்குகளுக்கான சட்ட உரிமைகளைப் பற்றி பேசுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் வன அதிகாரி, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT