Last Updated : 06 Jun, 2020 01:52 PM

 

Published : 06 Jun 2020 01:52 PM
Last Updated : 06 Jun 2020 01:52 PM

கேரளாவில் முன்னாள் கால்பந்து வீரர் கரோனா வைரஸுக்கு மரணம்: 3 வயது, 3 மாத பேரப்பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கும் கரோனா பாசிட்டிவ்

கேரளாவில் கரோனா வைரஸுக்கு முன்னாள் கால்பந்து வீரர் பலியானார், இதனுடன் கேரள கரோனா பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

61 வயதான் ஹம்சா கோயா என்ற இந்தக் கால்பந்து வீரர் சந்தோஷ் ட்ராபி கால்பந்து தொடருக்காக மகாராஷ்ட்ரா அணியில் ஆடினார். இவர் மும்பையிலிருந்து மே 21ம் தேதி கேரளா திரும்பினார்.

மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவமனையில் ஹம்சா கோயா சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு நிமோனியா மற்றும் தீவிர சுவாசக்குழாய் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் நேற்று 5ம் தேதி இவரது உடல் நிலை மோசமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலை இந்தச் சிகிச்சைக்கு சரியாக வினையாற்றவில்லை, சிகிச்சையை உடல் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்குச் சென்றது.

இதனையடுத்து அவர் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இறந்து போனார்.

இவரது மனைவி, மகள், மருமகள், 3 வயது மற்றும் 3 மாத பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x