Last Updated : 11 Sep, 2015 03:45 PM

 

Published : 11 Sep 2015 03:45 PM
Last Updated : 11 Sep 2015 03:45 PM

சத்தீஸ்கரில் ஒரு வாரத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை

ஜெயினர்களின் பண்டிகையை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலத் திலும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயினர்கள் பண்டிகை கொண்டாடுவதால், மும்பையில் இறைச்சி விற்பனைக்கு ஆளும் பாஜக அரசு தடை விதித்தது. இதற்கு கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. மேலும், தடையை மீறி இறைச்சி விற்பனைக்காக ஸ்டால்கள் போட்டுள்ளன.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4-வது மாநில மாக பாஜக ஆளும் சத்தீஸ்கரிலும் இதே காரணத்தை சொல்லி இறைச்சி விற்பனைக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. “ஜெயினர் கள் உண்ணாவிரத நோன்பு இருந்து பண்டிகை கொண்டாடுவதால், வரும் 17-ம் தேதி வரை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படு கிறது” என்று சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெயினர்களின் பண்டிகையின் போது 2 நாள் இறைச்சி விற்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 3 நாட்கள் (வரும் 17, 18, 27) தடை விதிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதேபோல் மும்பையில் 4 நாட்கள் தடையை 8 நாட்களாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரிலும் இறைச்சி விற் பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த காஷ்மீர் உயர் நீதிமன்றம் ‘இறைச்சி விற்பனைக் கான தடையை கடுமையாக அமல் படுத்தும்படி’ போலீஸாருக்கு உத் தரவிட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x