Published : 04 Jun 2020 06:47 AM
Last Updated : 04 Jun 2020 06:47 AM

இந்தியாவில் கரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்து சோதனை

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றை நீக்க, ரெம்டெசிவிர் மருந்தை மனிதர்களுக்கு வழங்கும் சோதனை தொடங்கி உள்ளது.

கரோனாவுக்கு வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லாததால், ரெம்டெசிவிர் மருந்து மீதான ஆர்வம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு மற்றும் கிலீட்சயின்சஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்துதான் ரெம்டெசிவிர். இந்த மருந்தை எபோலா வைரஸ் தொற்றுக்காக பயன்படுத்தி வெற்றி கண்டனர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்துக்கு உள்ளது. எனவே, கரோனாவுக்கு சிறந்த மருந்தாக அமெரிக்காவில் ரெம்டெசிவிர் பயன்படுத்தப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்து கரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவதாக அமெரிக்க சுகாதாரத் துறைதெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜப்பானில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக கிலீட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கிலீட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை, கரோனா வைரஸ் தொற்றுக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரெம்டெசிவிர் மருந்தை இந்தியாவில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் சோதனை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x