வரி குறைவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்க: பிரதமருக்கு உ.பி. முதல்வர் கடிதம்

வரி குறைவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்க: பிரதமருக்கு உ.பி. முதல்வர் கடிதம்
Updated on
1 min read

மத்திய விற்பனை வரி குறைவால் உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடு செய்யும்படி உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு மத்திய விற்பனை வரியை 1.4.2007 அன்று 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகவும், ஜூன் 2008-ல் 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும் குறைத்தது.

இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு 22.8.2008 அன்று உறுதி அளித்தது. இந்த வகையில் உ.பி.அரசு 2007-08 முதல் 2012-13 வரை ஏற்பட்ட வருவாய் இழப்பான ரூ.2711.62 கோடிக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது,

இந்த தொகையை வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டி, உடனடியாக மாநில அரசுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in