Published : 03 Jun 2020 01:50 PM
Last Updated : 03 Jun 2020 01:50 PM

மும்பை அருகே கரையை கடக்கத் தொடங்கியது நிசர்கா புயல்; பலத்த மழை

அரபிக்கடலில் உருவெடுத்து நிசர்கா புயல் மும்பை அருகே அலிபாக் பகுதியில் கரையை கடந்து வருகிறது. முழுவதும் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. நிசர்கா புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத், டாமன் & டியூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

— ANI (@ANI) June 3, 2020

இதனால் வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூன் 3) காலை முதல் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

புயல் கரையை கடப்பதால் மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x