Published : 03 Jun 2020 10:18 AM
Last Updated : 03 Jun 2020 10:18 AM

அமெரிக்காவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு 

அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் கரோனா தொற்று, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்தும் பேசினர்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜி-7 உச்சி மாநாட்டு பங்கேற்பு நாடுகளை அதிகரிக்க ட்ரம்ப் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார், என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா இந்த அழைப்பி ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உலக அரங்கில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று மோடி ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டார்.

தற்போதைய ஜி-7 பழையதாகி விட்டது எனவே இதில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x