Last Updated : 03 Jun, 2020 08:44 AM

 

Published : 03 Jun 2020 08:44 AM
Last Updated : 03 Jun 2020 08:44 AM

டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் மீண்டும் தீப்பிடிப்பு: 120 குடிசைகள் எரிந்து சாம்பல்

தென் கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட தீப்பிடிப்பு சம்பவத்தில் 120 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

வால்மீகி மொஹல்லாவில் தீப்பிடித்துள்ளதாக டெல்லி தீயணைப்புச் சேவைப்பிரிவினருக்கு அதிகாலை 1.30 மணியளவில் அழைப்பு வந்தது.

உடனடியாக 22 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் அதிகாலை 3.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதில் யாரும் காயமடையவில்லை. 120 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

அடுத்தடுத்து இதே பகுதியில் ஏற்படும் 2வது தீப்பிடிப்புச் சம்பவமாகும் இது. கடந்த வாரம் இதே துக்ளகாபாத் பகுதியில் ஏற்பட்ட பெரிய தீவிபத்தில் 250 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x