Published : 03 Jun 2020 07:26 AM
Last Updated : 03 Jun 2020 07:26 AM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சந்தைகள், பூங்காக்கள், நெடுஞ்சாலைகளில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சமூக இடை|வெளியை மக்கள் பின்பற்றுகிறார்களா, முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ரயில் நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள தெர்மல் ஸ்கேனர் கருவிகள் இருக்க வேண்டும். ரயில் நிலையத்துக்குள் செல்லும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை போலீஸாரும் சுகாதாரத் துறைஅதிகாரிகளும் உறுதி செய்யவேண்டும். தொழில் நிறுவனங்களும் விதிமுறைகளைப் பின்பற்றி இயங்க வேண்டும். மருத்துவமனைகள் தூய்மையாக பராமரிக்கப்படுவதோடு மின் விநியோகமும் சீராக இருக்க வேண்டும். கரோனா வைரஸ் பரிசோதனைக்காக புதிய ஆய்வுக் கூடங்கள் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT