Published : 03 Jun 2020 07:25 AM
Last Updated : 03 Jun 2020 07:25 AM

ஜெஸிகா லால் கொலையாளி மனு சர்மா சிறையிலிருந்து விடுதலை

முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா என்கிற சித்தார்த் வசிஷ்ட். டெல்லி ஹோட்டல் ஒன்றில் கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் தர மறுத்த மாடல் அழகி ஜெஸிகா லாலை சுட்டுக்கொன்றார். இந்த வழக்கில் 2006-ல் தண்டிக்கப்பட்ட அவர், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், நன்னடத்தை காரணமாக மனு சர்மாக கடந்த 2 ஆண்டுகளாக திறந்தவெளி சிறையில் இருந்து வந்தார். காலை 8 மணிக்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு சிறைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கான தன்னார்வ அமைப்பிலும் அவர் பணியாற்றி வந்தார்.

இதையடுத்து, மனு சர்மாவின் தண்டனையை குறைக்க தண்டனை மறுஆய்வு வாரியம் பரிந்துரை செய்தது. இதற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கினார். இதையடுத்து, மனு சர்மா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் மேலும் 16 பேர் நன்னடத்தைக்காக விடுதலை செய்யப்பட்டனர். மனு சர்மா சுமார் 16 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். மனு சர்மாவை விடுதலை செய்வதில் தனக்கு ஆட்சேபம் ஏதுமி்ல்லை என்று ஜெஸிகா லாலின் தங்கை சப்ரினா லால் கடந்த 2018-ல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x