Last Updated : 02 Jun, 2020 11:41 AM

 

Published : 02 Jun 2020 11:41 AM
Last Updated : 02 Jun 2020 11:41 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது: 95 ஆயிரம் பேர் குணமடைந்தனர்; 204 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு ஏறக்குறைய 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 204 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறைஅமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது

கரோனாவில் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98ஆயிரத்து 706 ஆக இருக்கிறது. கரோனவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95ஆயிரத்து 526 ஆகவும், 97 ஆயிரத்து 581 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். உயிரிழந்தவர்கள்எண்ணிக்கை 5ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த கரோனா உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 76 பேர், டெல்லியில் 50 பேர், குஜராத்தில் 25 பேர், தமிழகத்தில் 11 பேர் அடங்குவர். மேற்கு வங்கம் மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் தலா 8 பேர், தெலங்கானாவில் 6 பேர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் தலா 4 பேர், பிஹார், ஜம்மு காஷ்மீரில் தலா 3 பேர், ஆந்திராவில் இருவர், ஹரியாணா, கர்நாடகா, கேரளா, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,362 ஆக அதிகரித்துள்ளது.அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,063 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 358 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 325 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 523 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 198ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 88 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 217 ஆகவும்,ஆந்திராவில் 64 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 52 பேரும், பஞ்சாப்பில் 45 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 31 பேரும், ஹரியாணாவில் 21 பேரும், பிஹாரில் 21 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 10 பேரும், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகாண்டில் தலா 6 பேர், அசாமில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,013 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 30,108 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 495ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 13,170 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 20,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,746 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 17,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.10,7809 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 8,980 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,283 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 8,075 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 5,772 பேரும், ஆந்திராவில் 3,783 பேரும், பஞ்சாப்பில் 2,301 பேரும், தெலங்கானாவில் 2,792 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 2,601 பேர், கர்நாடகாவில் 3,408 பேர், ஹரியாணாவில் 2,356 பேர், பிஹாரில் 3,926 பேர், கேரளாவில் 1,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 608 பேர் குணமடைந்துள்ளனர்

ஒடிசாவில் 2,104 பேர், சண்டிகரில் 294 பேர் , ஜார்க்கண்டில் 659 பேர், திரிபுராவில் 420 பேர், அசாமில் 1,390 பேர், உத்தரகாண்டில் 958 பேர், சத்தீஸ்கரில் 547 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 340 பேர், லடாக்கில் 77 பேர், மேகாலயாவில் 27 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 25 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 83 பேர், கோவாவில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அருணாச்சலப் பிரதேசத்தில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகள், மிசோரம் சிக்கிமில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x