Published : 01 Jun 2020 09:50 PM
Last Updated : 01 Jun 2020 09:50 PM

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்  இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்

ரமேஷ் பொக்கிரியால்- கோப்புப் படம்

புதுடெல்லி

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளா்.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஆர். சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு (@CMOTamilNadu) எங்கள் நன்றி.’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x