Published : 01 Jun 2020 02:58 PM
Last Updated : 01 Jun 2020 02:58 PM

மேற்குவங்கத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: முன்னெச்சரிக்கையுடன் மக்கள் வழிபாடு

மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையுடன் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி மாநிலத்தில் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

ஆனால் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x