Published : 29 May 2020 07:14 PM
Last Updated : 29 May 2020 07:14 PM

கரோனா வைரஸ்; நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சி

கரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக வைரஸை நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து ஆய்வுக்கு தயார் செய்து வருகின்றனர்.

ட்டுமொத்த உலக நாடுகளும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாடுகள் தீவிரமாக இருக்கின்றன

அந்த முயற்சியில் உலகம் முழுவதும் 100 வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளன. இதற்கான முயற்சிகள் அனைத்தையும், உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பங்களிப்பை அளித்து வருகிறது. தற்போதுவரை 14 வகையான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் ஆய்வில்இறங்கி அதில் பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளது. மத்திய அறிவியல்துறை அமைச்சகம் உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. நிதியுதவி, நிர்வாக ரீதியான உதவிகளை தடுப்பு மருந்து கண்டுபிடித்து வரும் நிறுவனங்களுக்கு அரசு தாராளமாக அளித்து வருகிறது

இந்தநிலையில் கோவிட்-19 நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கரோனா வைரஸை (SARS-CoV-2) நிலையாக வளர்க்கும் முறையை செல்லுலார் மற்றும் மாலிக்குலார் மையம் (CCMB) உருவாக்கியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பலரிடமிருந்து இந்த வைரஸ்களை உயிரணு மற்றும் நுண்ணுயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Micro Biology – CCMB) சேர்ந்த வைராலஜி நிபுணர்கள் பிரித்துள்ளனர்.

பரிசோதனைக்கூடங்களில் இந்த வைரஸ்களை வளர்ப்பதன் மூலம், தடுப்பு மருந்து உருவாக்குதல் மற்றும் கோவிட்-19 சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளைப் பரிசோதிக்க முடியும்.

மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கும், இந்த வைரஸ் வளர்ப்பு உதவும். சோதனைக் குழாய்களில் வைரசுக்கு எதிரான மருந்துகளின் செயல்பாட்டுத் திறனைப் பரிசோதிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x