Published : 29 May 2020 01:06 PM
Last Updated : 29 May 2020 01:06 PM

முறியடிக்கப்பட்ட புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் ஹிஸ்புல் தீவிரவாதிக்கு சொந்தமானது: போலீஸார் தகவல் 

புல்வாமா. | கோப்புப் படம்.

வியாழக்கிழமையன்று முறியடிக்கப்பட்ட புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஹிதாயத்துல்லா மாலிக் எனப்வருக்குச் சொந்தமானது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷோபியான் மாவட்டத்தின் ஷாரத்போராவைச் சேர்ந்த ஹிதாயத்துல்லா மாலிக் என்பவருக்கு சொந்தமானது அந்த கார் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

40 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய இந்தக் கார் புல்வாமாவில் இரண்டு சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டது. ஆனால் தீவிரவாதி தப்பி விட்டான்.

ஹிதாயத்துல்லா மாலிக் என்ற ஹிஸ்புல் தீவிரவாதி கடந்த ஜூலை மாதம் இயக்கத்தில் சேர்ந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் இலக்கு என்ன? வெடிபொருட்களின் தன்மை ஆகியவற்றை போலீஸார் ஆராய்ந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x