Published : 29 May 2020 06:36 AM
Last Updated : 29 May 2020 06:36 AM
விமான சேவையில் ஏற்கெனவே பெரும் நஷ்டங்களைச் சந்தித்திருக்கும் ஏர் இந்தியா, தற்போது ஊரடங்கு நடவடிக்கையால் மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை மீட்க அதன் ஊழியர்கள் சங்கம் அரசின் உதவியை நாடியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில். அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை மீட்க வேண்டியது இந்த நெருக்கடி காலத்தில் மிக முக்கியமானது.
ஏர் இந்தியா ஒவ்வொரு நெருக்கடி காலத்தின் போதும் தனது பணியைப் பொறுப்புடன் செய்து வந்திருக்கிறது. தற்போது ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி உதவியை அரசு வழங்கினால் தற்போதுள்ள நிதி நெருக்கடியைச் சமாளித்து மீண்டுவர உதவும். தொடர்ந்து விமான சேவையை தடையின்றி வழங்கவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT