Published : 29 Aug 2015 08:48 AM
Last Updated : 29 Aug 2015 08:48 AM
பெங்களூரு சிட்டி ரயில் நிலை யத்தில் பிரசாந்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக, பயணி கள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ரயில்கள் பாதியிலே நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
புவனேஷ்வரில் இருந்து விசாகப் பட்டினம் வழியாக பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு பிரசாந்தி விரைவு ரயில் நேற்று பிற்பகல் 12.15 மணிக்கு வந்தது.
அப்போது ரயிலின் இன்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் எதிர் பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனால் பெரும் சத்தத்துடன் அதிர்வு ஏற் பட்டது. ரயில் குறைவான வேகத்தில் வந்ததால் பயணி களுக்கு காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட ரயில்வே அதிகாரி கள், விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். ரயிலையும், தண்ட வாளத்தையும் சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து பெங்களூரு வந்த டபுள் டக்கர் ரயில் கிருஷ்ணராஜ புரத்தி லும், லால்பாக் விரைவு ரயில் பங்காரு பேட்டை ரயில் நிலையத்தி லும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT