Last Updated : 26 May, 2020 01:06 PM

 

Published : 26 May 2020 01:06 PM
Last Updated : 26 May 2020 01:06 PM

டெல்லியில் குடிசைப்பகுதியில் பயங்கர தீ : 1,500 குடிசைகள் எரிந்து சாம்பல்- நூற்றுக்கணக்கானோர் வீடிழந்தனர்

தென்கிழக்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் திங்கள் நள்ளிரவு பெரிய அளவுக்கு தீ பிடித்தது. இதில் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பலானதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு 12.50 மணிக்கு அழைப்பு வர 28 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தீப்பிடித்த போது குடிசைவாசிகள் தூக்கத்தில் இருந்தனர், ஆனால் போலீஸார், தீயணைப்புத் துறையினர் குடிசைவாசிகளை மீட்டனர்.

அதிகாலை 3.40 மணியளவில்தான் நெருப்புக் கட்டுக்குள் வந்தது. 1500 குடிசைகள் காலியாகின, நூற்றுக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர். டெல்லி அரசு தற்போது நஷ்டத்தை கணித்து வருகிறது.

டெல்லி தென் கிழக்கு மண்டல உதவி காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறும்போது, “நள்ளிரவு 1 மணிக்கு தீப்பிடித்ததாக அழைப்பு வந்தது. உடனே போலீஸ் படை விரைந்தனர். 1000-1200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது. தீப்பிடித்தவுடனேயே பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அதிகாலை 4 மணியளவில் போராடி தீயணைக்கப்பட்டது, உயிரிழப்பு எதுவும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x