Published : 25 May 2020 09:50 PM
Last Updated : 25 May 2020 09:50 PM

உம்பன் புயல் பாதிப்பு; ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சு 

பிரதமர் நரேந்திர மோடி வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

பிரதமர் மோடி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் வங்காளதேச மக்களுக்கும் தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உம்பன் புயல் இரு நாட்டிலும் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்த மதிப்பீட்டை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். மேலும் கரோனா குறித்தும் இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்.

இந்த சவால்களை சமாளிக்க இந்தியா வங்காளதேசத்துடன் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். பிரதமர் ஷேக் ஹசீனாவும் வங்காளதேச மக்களும் நல்ல உடல் நலனும் செழிப்பும் பெற பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x