

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. இதில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி (நாளை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் 1.30 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. டெல்லியில் மட்டும் 380 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
உள்நாட்டு விமானச் சேவையில் பயணிக்கும் பயணிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.