Last Updated : 24 May, 2020 11:02 AM

 

Published : 24 May 2020 11:02 AM
Last Updated : 24 May 2020 11:02 AM

ஒரேநாளில் அதிகபட்சம்: 24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கரோனா தொற்று; 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 147 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 560 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 867ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 829 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 281 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 231 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 160 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 49 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 155 ஆகவும், ஆந்திராவில் 56 ஆகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் 42 பேரும், பஞ்சாப்பில் 39 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 21 பேரும், ஹரியாணாவில் 16 பேரும், பிஹாரில் 11 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளா, ஜார்க்கண்ட், அசாமில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,190 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 13,407 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 13,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,169 பேர் குணமடைந்தனர். 4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 12 ஆயிரத்து 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,297 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 6,742 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6,371 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6,017 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 3,459 பேரும், ஆந்திராவி்ல் 2,757 பேரும், பஞ்சாப்பில் 2,045 பேரும், தெலங்கானாவில் 1,813 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 1,569 பேர், கர்நாடகாவில் 1,959 பேர், ஹரியாணாவில் 1,131 பேர், பிஹாரில் 2,380 பேர், கேரளாவில் 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 515 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,269 பேர், சண்டிகரில் 225 , ஜார்க்கண்டில் 350 பேர், திரிபுராவில் 189 பேர், அசாமில் 359 பேர், உத்தரகாண்டில் 244 பேர், சத்தீஸ்கர் 214 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 185 பேர், லடாக்கில் 49 பேர், மேகாலயாவில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 10 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 29 பேர், கோவாவில் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் ஒருவர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x