Published : 24 May 2020 08:47 AM
Last Updated : 24 May 2020 08:47 AM

ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரையை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்த அனுமதி

நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் உள்ளிட்ட மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த மாத்திரைகளை பயன்படுத்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழங்கியுள்ளது.

இதன்படி, சுகாதார மற்றும் சுகாதார தொழிலாளர்கள் கரோனா பாதிப்பு மற்றும் கரோனா பாதிப்பு அல்லாத பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப் பட்டவர்களுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுவின் (எச்சிகியூ) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. கரோனா பாதிப்பு மற்றும் அல்லாத மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள், முன் வரிசை தொழிலாளர்கள், போலீஸார், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்களின் வீட்டுத் தொடர்பு உறவினர்களுக்கு மாத்திரையை வழங்க வேண்டும் என கூறி உள்ளது.

இந்த மருந்தை பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருந்துகளை தொடங்குவதற்கு முன்பு, ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது சாத்தியமான போதைப்பொருள் தொடர்புக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற மத்திய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x