Last Updated : 22 May, 2020 10:05 AM

 

Published : 22 May 2020 10:05 AM
Last Updated : 22 May 2020 10:05 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.18 லட்சமாக அதிகரிப்பு: 24 மணிநேரத்தில் 6 ஆயிரம் பேர் பாதிப்பு;148 பேர் உயிரிழப்பு


புதுடெல்லி, பிடிஐ

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 4-வது லாக்டவுன் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் கரோனா வைரஸ் பரவல் தீவரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது, 148 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை ஒரு லட்சத்து 18ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. 48 ஆயிரத்து 534 ேபர் குணமடைந்துள்ளனர், 66 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,454 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 773 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 270 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 194 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 151 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 45 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 138ஆகவும், ஆந்திராவில் 53 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 41 பேரும், பஞ்சாப்பில் தலா 39 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 20 ேபரும், ஹரியாணாவில் 15 பேரும், பிஹாரில் 11 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாமில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,642 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 11,726 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13ஆயிரத்து 967 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வதுஇடத்தில் உள்ள குஜராத்தில் 12,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,488 பேர் குணமடைந்தனர். 4-வது இடத்தில்உள்ள டெல்லியில் 11ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,567 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 6,227 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 5,981 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 5,515 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 3,197 பேரும், ஆந்திராவி்ல் 2,647 பேரும், பஞ்சாபில் 2,028 பேரும், தெலங்கானாவில் 1,699 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 1,449 பேர், கர்நாடகாவில் 1,605 பேர், ஹரியாணாவில் 1,031 பேர், பிஹாரில் 1,982 பேர், கேரளாவில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 510 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,103 பேர், சண்டிகரில் 217 , ஜார்க்கண்டில் 290 பேர், திரிபுராவில் 173 பேர், அசாமில் 203 பேர், உத்தரகாண்டில் 146 பேர், சத்தீஸ்கர் 128 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 152 பேர், லடாக்கில் 44 பேர், மேகாலயாவில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 10 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூரில் 25 பேர், கோவாவில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x