Published : 20 May 2020 01:17 PM
Last Updated : 20 May 2020 01:17 PM

டெல்லியில் இன்றும் கடும் போக்குவரத்து நெரிசல்: அணிவகுத்த வாகனங்கள்

டெல்லியில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் 4-வது முறை தொடர்ந்து வருகிறது. கடந்த 3 கட்டஊரடங்கைப் போல் அல்லாமல், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதைப்பின்பற்றி ஒவ்வொரு மாநில அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளனர். இருப்பினும் 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை தொடரும்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். இதில் டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதித்த டெல்லி அரசு குறைந்த பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதித்துள்ளது. மேலும் ஆட்டோவில் ஒருவரும், இ-ரிக்சாவில் இருவரும், வாடகைக்கார்களில் இரு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதித்துளள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் டெல்லியில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து வழக்கம் போல் காணப்பட்டது. கரோனா ஊரடங்கு நிலைக்கு முந்தைய சூழல்போன்று இருந்தது. குறிப்பிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்தநிலையில் 2-வது நாளாக இன்றும் டெல்லியில் கடும் வாகனப் போக்குவரத்தும், நெரிசலும் காணப்பட்டது. சாலைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஒவ்வொரு இடத்தையும் வாகனங்கள் கடந்து செல்ல நீண்டநேரம் ஆகிறது. குறிப்பாக டெல்லியையொட்டியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வேலைக்குச் செல்வோர், தொழில் மற்றும் வர்த்தக தேவைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x