Last Updated : 19 May, 2020 04:19 PM

 

Published : 19 May 2020 04:19 PM
Last Updated : 19 May 2020 04:19 PM

அர்னாப் மீதான அவதூறு வழக்கு; எப்ஐஆர்ரை ரத்து செய்ய முடியாது: 3 வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கும்பல் கொலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு பேசியதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்ஸாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவதூறாகப் பேசியதாகக்கூறி சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தனர்.இதில் நாக்பூர் போலீஸ் நிலையத்தில் அர்னாப் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாக்பூரில் தொடர்ந்த எப்ஆர்ரை மும்பை என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற கடந்த ஏப்ரல் 21-ம்தேதி உத்தரவிட்டது. மேலும் அர்னாப் மீது 3 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குப் பதிவும் செய்யக்கூடாது என்றும் உத்தரவி்ட்டப்பட்டது.

இதற்கிடைேய மற்றொரு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதமாக அர்னாப் கோஸ்ஸாமி பேசியதாக கடந்த 2-ம் தேதி அர்னாப் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சோனியா காந்தி மீது அவதூறு பேசியதாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்ரை ரத்து செய்யக்கோரியும், மும்பை போலீஸார் கடந்த 2-ம் தேதி பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் அர்னாப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவின் விசாரணை முடிந்தநிைலயில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொடுக்கபட்ட புகார்கள் மீதான விசாரணை ரத்து செய்கிறோம்.

ஆனால்,அவதூறு வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது. எந்தவிதமான முதல்தகவல் அறிக்கையையும் பிரிவு32-ன் கீழ் ரத்து செய்ய முடியாது. மேலும், மும்பை போஸீஸார் பதிவு செய்த வழக்கையும் சிபிஐக்கு மாற்றக் கோரும் மனுவையும் பரிசீலிக்க இயலாது

அர்னாப் கோஸ்ஸாமி மீது அடுத்த 3 வாரங்களுக்கு போலீஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்கிறோம். அர்னாப் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி எப்ஐஆர் ரத்து செய்துவது தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். அதுவரை அர்னாப் கோஸ்ஸாமிக்கு தேவையான பாதுகாப்பை மும்பை போலீஸ் ஆணையர் வழங்க வேண்டும்.

அரசிலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(ஏ)ன்படி பத்திரிகையாளரின் உரிமை உயர்ந்த நிலை என்றாலும், கருத்து சுதந்திரத்தின் மையமாகவே பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவி்ன் பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர் உண்மையை பேசும்வரைதான் வலிமை இருக்கும். ஆனாலும் இந்த சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) (ஏ) பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் வரம்பிற்குள் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்டம் இருப்பது அவசியம் “ எனத் தீர்ப்பளித்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x