Last Updated : 18 May, 2020 04:16 PM

 

Published : 18 May 2020 04:16 PM
Last Updated : 18 May 2020 04:16 PM

எல்லோரையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது;பொருளாதார நிதித்தொகுப்பின் மதிப்பு ரூ1.86 லட்சம் கோடிதான்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட மத்தியஅரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் மதிப்பு ரூ.1.86லட்சம் கோடிதான். இது நம்பிக்கையளிப்பதாகவும், போதுமானதாகவும் இல்லை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும். ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து ஆயிரத்து 603 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.20.97 லட்சத்துக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ரூ.20 லட்சம் கோடிக்குத் திட்டங்கள் இல்லை. திட்டங்களின் மொத்த மதிப்பே ரூ.3.22 லட்சம் கோடிதான் என காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளரும், முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா நேற்றுகுற்றம் சாட்டினார்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதுவதற்காக மத்தியஅரசு அறிவித்த திட்டங்களின் மதிப்பு காங்கிரஸ் கட்சியின் பார்வையில் ரூ.1.86 லட்சம் கோடிதான், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீதம்தான்.

இது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த தொகை பொருளாதாரச் சிக்கலில் இருந்து ஏழைகளையும், தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் மீட்கப் போதுமானதாகஇல்லை.

மத்திய அரசு அறிவித்த பொருளதார ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து பல்வேறு பொருளாதார ஆய்வாளர்களும், ரேட்டிங் நிறுவனங்களும் வங்கிகளும், நிதித்தொகுப்பு என்பது 0.8 சதவீதம் முதல் 1.5 சதவீதம் மட்டுமே என மதிப்பிடுகின்றன

மத்திய அரசு அறிவித்த நிதித்தொகுப்பு அதிருப்தி தரும்விதத்தில் இருக்கிறது, அதை மறுஆய்வு செய்து, முழுமையான நிதித்தொகுப்பாக ரூ.10 லட்சம் கோடிக்கு கூடுதலாக செய்யும் வகையில் அதாவது ஜிடிபியில் 10 சதவீதம் இருக்கும் வகையில் அறிவிக்கும்படி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசு சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு சீ்ர்த்திருத்தங்களை புகுத்த முயல்கிறது. சீர்திருத்தம் செய்யும் துறையோடு தொடர்புள்ளவர்களிடம் ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் சட்டவரைவு கொண்டுவராமல், விவாதிக்காமல் மத்திய அரசு அறிவிக்கிறது, இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம், சவால்விடுவோம்.

திட்டமிட்டே நாடாளுமன்றத்தை புறக்கணித்துவி்ட்டு மத்திய அரசு சீர்திருத்தங்களை தன்னிச்சையாக செய்யமுயல்கிறது, நிதித்தொகுப்பு குறித்து நாடாளுமன்ற குழுவிடம்கூட ஆலோசிக்கவில்லை.

உண்மையாகவே ஆக்கப்பூர்வமான சீர்த்திருத்தமாக இருந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகஇருந்தால் அதை காங்கிரஸ் கட்சிஆதிரிக்கும். ஆனால் அரசு சந்தர்ப்பவாதியாக இருக்கிறது.

ஒருவர் கருத்தில் உதித்ததை அல்லதுஅல்லது ஒரு குழுவினர் கருத்தில் உருவாகும் சி்ந்தனையே சரி என முடிவு செய்து ஆலோசிக்காமல், விளைவுகளை அறியாமல் அறிவிக்கிறது மத்திய அரசு என பல்ேவறு நாளேடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன

எல்லோரையும் எல்லா நேரத்திலும் முட்டாள்களாக்க முடியாது. மத்திய அரசு அறிவித்த நிதித்தொகுப்பு போதுமானதாகஇல்லை. இந்த நிதித்தொகுப்பு நாட்டில் அடிமட்டத்தில் உள்ள புலம்பெயர்தொழிலாளர்கள், விவசாயிகள், நிலமில்லாத விவசாய கூலிகள், தினக்கூலித்தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வேலையிழந்துள்ளவர்கள் என 13 கோடி குடும்பத்தினரை பற்றி சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.

சுய தொழில் புரிவோர், சிறிய கடை வைத்திருப்போர், கீழ்நடுத்தர குடும்பத்தினர், பணமில்லாமல் கடன் வாங்கி செலவும் செய்யும் மக்கள், 5.8கோடி சிறு,நடுத்தரநிறுவனங்கள் என அனைவரும் பொருளாதார நிதித்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த பொருளாதார தொகுப்பின் மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடிதான். மற்றவை எல்லாம் பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவை, சில திட்டங்கள், நீண்டகாலத்திட்டங்கள் செலவு மீண்டும் சொல்லப்பட்டுள்ளன.

கூடுதலாக மத்திய அரசு செலவு செய்யாமல் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ள முடியாது. இந்த செலவுகள் அனைத்தும் நிதியமைச்சர்மூலம் ஏற்கப்பட்டதுதான். உண்மையை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாது.

ரேட்டிங் ஏஜென்சிகள் நாட்டின் மதிப்பை குறைத்துவிடும் என்றுஅஞ்சி மத்தியஅரசு செலவழிக்காமல் இருக்கும் குற்றச்சாட்டை நம்பவில்லை. ரேட்டிங் ஏஜென்சிகள் நாட்டை நிர்வாகம் செய்யவில்லை.

நான் ஏற்கெனவே கூறியதுபோல், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பற்றி மத்தியஅரசு கவலைப்பட வேண்டாம், கூடுதலாக 10லட்சம் கோடி ரூபாய் செலவு செய்தால்தான் பொருளாதாரம் மீளும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x