Last Updated : 18 May, 2020 11:13 AM

 

Published : 18 May 2020 11:13 AM
Last Updated : 18 May 2020 11:13 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 96 ஆயிரமாக அதிகரிப்பு; 3 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுநாள்வரை இல்லாத அளவுக்கு 5 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 157 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிரிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 823 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 157 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 63 பேர், குஜராத்தில் 34 பேர், மேற்கு வங்கத்தில் 6 ேபர், டெல்லியில் 31 பேர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 5 பேர், தமிழகத்தில் 4 பேர், பஞ்சாப்பில் 3 பேர், ஹரியாணா, ஆந்திரா, பிஹார், கர்நாடகா, ஒடிசா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்

கரோனாவிலிருந்து குணமடைந்துவருவோர் சதவீதம் 38.51 ஆக இருக்கிறது என மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,198 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 659 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 248 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 160 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 131 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 34 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 104 ஆகவும், ஆந்திராவில் 50 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 37 பேரும், பஞ்சாப்பில் தலா 35 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 13 ேபரும், ஹரியாணாவில் தலா 14 பேரும், பிஹாரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,053ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,688 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 10,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,308 பேர் குணமடைந்தனர். 2-வது இடத்தில் இருந்த குஜராத்தில் எண்ணிக்கை 11 ஆயிரத்து 379 ஆகவும்,குணமடைந்தார் 4,499 ஆகவும் உள்ளது

3-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,172ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில்உள்ள டெல்லியிில் 10,ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,485 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 5,202 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4,977 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4,259 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,677 பேரும், ஆந்திராவி்ல் 2,407 பேரும், பஞ்சாபில் 1,964 பேரும், தெலங்கானாவில் 1,551 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 1,181 பேர், கர்நாடகாவில் 1,147 பேர், ஹரியாணாவில் 910 பேர், பிஹாரில் 1,262 பேர், கேரளாவில் 601 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 497 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 828 பேர், சண்டிகரில் 191 , ஜார்க்கண்டில் 223 பேர், திரிபுராவில் 167 பேர், அசாமில் 107 பேர், உத்தரகாண்டில் 92 பேர், சத்தீஸ்கர் 67 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 80 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூரில் 7 பேர், மேகாலயாவில் 13 பேர், கோவாவில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x