Published : 15 May 2020 02:59 PM
Last Updated : 15 May 2020 02:59 PM

கரோனா; ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் முதல்வர் வலியுறுத்தல்

திஸ்பூர்

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அசாம் முதல்வர் சர்பானாந்த சோனாவால் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். கடைசியாக நடந்த கூட்டத்திலும் மாநில முதல்வர்கள் 9 பேரில் 5 பேர் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மூன்றாவது கட்டமாக மே 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது

இருப்பினும் கடந்த மாதம் 20-ம் தேதிக்கு பின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க விதிகளை மத்தியஅரசு தளர்த்தியது. நாட்டில் உள்ள 775 மாவட்டங்களில் கரோனா பாதிப்புள்ளான மாவட்டங்கள், மிதமான பாதிப்ப , பாதிப்பு இ்ல்லாதவை என சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாகப் பிரித்து அறிவித்தது.

மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கி வருகின்றனர்.

மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி 5-வது கட்டமாக அண்மையில் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையில் ஊரடங்கிற்கு பிறகு என்ன செய்வது, நீட்டிக்கும் தேவையுள்ளதா, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு தொடரும் எனவும் அதேசமயம் பல்வேறு விதி விலக்குகளுடன் இது அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அசாம் முதல்வர் சர்பானாந்த சோனாவால் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளோம். ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்று செயல்படுத்துவோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x