Published : 14 May 2020 07:43 PM
Last Updated : 14 May 2020 07:43 PM

இந்திய கடற்படை தயாரித்த புதுமையான, குறைந்த செலவிலான,தனிநபர் பாதுகாப்பு கவசம்: காப்புரிமைக்குப் பதிவு 

இந்திய கடற்படை குறைந்த செலவில் தனிநபர் பாதுகாப்பு கவசத்தைத் தயாரித்துள்ளது. இதற்கான காப்புரிமை கோரப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய, மருத்துவ தனி நபர் கவசத்தை, விரைந்து மொத்த உற்பத்தி செய்வதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுசார் சொத்துக்களுக்கு காப்புரிமை பெற உதவும் அமைப்பு, மத்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என் ஆர் டி சி தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது.

குறைந்த செலவிலான இந்த தனிநபர் பாதுகாப்புக் கவசத்தை, கடற்படை மருத்துவக் கழகத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில் பணிபுரியும் இந்திய கடற்படையின் மருத்துவரால் தயாரிக்கப்பட்டது.
கடற்படைக்குச் சொந்தமான, மும்பையில் உள்ள கப்பல் பட்டறையில், பரிசோதனை அடிப்படையில் இந்த தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x