

கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாாரத்தை மீட்கும் வகையில் அறிவிக்கும் திட்டத்தி்ல் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவி்த்தார்
இந்நிலையில் 2-ம் நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கியப் பிரிவினருக்குத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வீட்டு வசதி, விவசாயிகள் குறிப்பாக சிறு விவசாயிகள், பழங்குடியின மக்கள் நலன் ஆகியவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.