Last Updated : 14 May, 2020 04:32 PM

 

Published : 14 May 2020 04:32 PM
Last Updated : 14 May 2020 04:32 PM

மாநிலத்திற்கு திரும்பி வருபவர்கள் பயண வரலாற்றை மறைக்க வேண்டாம்: மணிப்பூர் முதல்வர் வேண்டுகோள்

மணிப்பூர் புறப்படுவதற்கு முன் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் சமூக இடைவெளியுடன் காத்திருந்த காட்சி.

இம்பால்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாநிலத்திற்குத் திரும்பும் மணிப்பூர் மக்கள், தங்கள் பயண வரலாறு உள்ளிட்ட தகவல்களை மறைக்க வேண்டாம் என மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கில் சிக்கித் தவித்த 1,140 மணிப்பூரிகள் சென்னையில் இருந்து ஒரு சிறப்பு ரயிலில் புதன்கிழமை மாநிலத்திற்குத் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங் ஒரு வீடியோ செய்தியில் கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாநிலத்திற்குத் திரும்பும் மணிப்பூர் மக்கள், சுகாதாரப் பணியாளர்களிடமிருந்து பயண வரலாறு உள்ளிட்ட பொருத்தமான தகவல்களை மறைக்க வேண்டாம். ஏனெனில் பயண வரலாற்றை மறைப்பது பேரழிவு தரக்கூடியது.

ஊரடங்கில் சிக்கிய 1,100 க்கும் மேற்பட்ட மணிப்பூரிகள் சென்னையிலிருந்து திரும்பி வந்திருப்பது, கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நிர்வாகத்தின் முயற்சியில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது

ஆயினும்கூட, மாநிலத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னையைத் தவிர, அடுத்து பஞ்சாப், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து அதிகமான மணிப்பூர் மக்கள் வரும் நாட்களில் திரும்பி வருவதற்கு நிர்வாகம் உதவும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள வசதிகள் குறித்து திரும்பி வருபவர்களிடையே நிச்சயமாக ஏமாற்றம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு நல்ல வசதிகளை வழங்க நிர்வாகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஆனால் இப்போது ஆடம்பரமான ஹோட்டல் அறைகளில் தங்குவதற்கான நேரம் அல்ல, உயிர்களைக் காப்பாற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிலைமைகள் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் விமர்சினம் செய்கின்றனர். இந்த முக்கியமான கட்டத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் மக்களை தவறாக வழிநடத்தக்கூடும். அடுத்த 10-20 நாட்களுக்கு அரசாங்கம் செய்துவரும் முயற்சிகளைப் பற்றி குறைசொல்ல வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவிததார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x