Last Updated : 13 May, 2020 12:32 PM

 

Published : 13 May 2020 12:32 PM
Last Updated : 13 May 2020 12:32 PM

133 கோடி இந்தியர்களை மீண்டும் ஏமாற்றுகிறது மத்திய அரசு: பிரதமரின் நிவாரண அறிவிப்பு குறித்து அகிலேஷ் யாதவ் தாக்கு

கரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்குமாக என்று கூறி பிரதமர் மோடி செவ்வாயன்று ரூ.20 லட்சம் கோடி நிதிநிவாரணம் அறிவித்தார்.

இதனை எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சிக்க, மஹீந்திரா, அதானி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “முன்பு ரூ.15 லட்சம் என்று வாக்குறுதி அளித்தார் இப்போது ரூ.20 லட்சம் கோடி.

133 முறை 133 கோடி மக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். இந்த முறை உங்களை எப்படி நம்புவது?

இந்த முறை மக்கள் அறிவித்த தொகையில் எத்தனை பூஜ்ஜியங்கள் என்று கேட்க மாட்டார்கள். மாறாக எத்தனை பொய் வாக்குறுதிகள் என்று கேட்பார்கள்” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்.

கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ரூ.15 லட்சத்தை அனைவரது கணக்குகளிலும் போடுவேன் என்று 2014-ல் மோடி வாக்குறுதி அளித்ததாக எழுந்ததை வைத்து அகிலேஷ் யாதவ் தற்போது இது போன்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x