Last Updated : 10 May, 2020 02:16 PM

 

Published : 10 May 2020 02:16 PM
Last Updated : 10 May 2020 02:16 PM

ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கரோனா பாசிட்டிவ்

ஏர் இந்தியாவை விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்த 5 பைலட்களுக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் சீனாவுக்கான சரக்கு விமானப்போக்குவரத்துக்காக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் இவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பான சோதனையில் கரோனா தொற்று உறுதியானது.

இதில், 5 பேருக்குமே கரோனாவுக்கான எந்த ஒரு நோய் அறிகுறிகளும் இல்லை, அதாவது காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கரோனா அறிகுறிகள் இவர்களுக்கு இல்லை.

இவர்கள் பணியில் இணைவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கரோனா டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில் கரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் சீனாவில் உள்ள குவாங்ஸூவுக்கு சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x