Published : 10 May 2020 01:40 PM
Last Updated : 10 May 2020 01:40 PM

75 மாவட்டங்களில் கரோனா வைரஸ் சமூகப்பரவல் சோதனை: ஐசிஎம்ஆர் முடிவு

75 மாவட்டங்களில் கரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலையை அடைந்துள்ளதா என்பதை ஐசிஎம்ஆர் சோதனை செய்யவிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3300க்கும் மேற்பட்ட கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,584 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பெரிதும் பாதிக்கப்பட்ட கரோனா ஹாட்ஸ்பாட்களான 75 மாவட்டங்களில் கரோனா வைரஸ் சமூகப்பரவல் கட்டத்தை எட்டியுள்ளதா என்ற சோதனையை ஐசிஎம்ஆர் மேற்கொள்கிறது.

இதற்கிடையே மத்திய அரசு தமிழ்நாடு, குஜராத், உ.பி., டெல்லி, ராஜஸ்தான், ம.பி, பஞ்சாப், மே.வங்கம், ஆந்திரா, தெலங்கான மாநிலங்களுக்கு உயர்மட்ட மத்தியக் குழுவை அனுப்பியுள்ளது.

சமூகப்பரவலுக்கான சோதனை ஏப்ரல் முதல் வாரத்திலேயே நடந்திருக்க வேண்டும் ஆனால் நடத்த முடியவில்லை. இப்போது 75 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாகவும் சமூகப் பரவலைக் கண்டுபிடிக்கவும் சோதனை செய்ய இறுதிப் பட்டியல் விரைவில் இறுதி செயப்படவுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

“75 மாவட்டங்களுக்குச் சென்று பரவல் இருந்தால் கண்டுப்பிடிக்கப் போகிறோம். அப்படி இருக்குமேயானால் அதன் வீச்சு குறித்து கணிக்கப் போகிறோம்” என்று மூத்த ஐசிஎம்ஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐசிஎம்ஆர் சர்வேக்காக துரித ஆன்ட்டிபாடி டெஸ்ட் கருவிகள் கொண்டு சோதிக்க வேண்டும் ஆனால் தற்போது எய்ட்ஸ் பரிசோதனைக்கான எலிசா சோதனையை கரோனா வைரஸ் சோதனியில் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதுவரை மொத்தமாக 15,25,631 டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலங்கள் கண்காணிப்புகளை இன்னமும் தீவிரப்படுத்த அறிவுறித்தப்பட்டுள்ளனர். தீவிர திடீர் சுவாசக்க்குழல் பிரச்சினை/ இன்ப்ளுயென்சா போன்ற காய்ச்சலுக்கான டெஸ்ட்கள் இதுவரை பாதிக்கபடாத மாவட்டங்களிலும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கடந்த 14 நாட்களாக எந்த ஒரு கேசையும் ரிப்போர்ட் செய்யாத மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x