Published : 08 May 2020 01:43 PM
Last Updated : 08 May 2020 01:43 PM

மிக்-29 விமானம் விபத்து: குதித்து தப்பிய பைலட்

கோப்புப் படம்

புதுடெல்லி

இந்திய விமானப்படையின் மிக்-29 விமானம் ஜலந்தர் அருகே விபத்துக்குள்ளானது.

இந்திய விமானப்படை விமானங்கள் காலையில் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவது வாடிக்கை. அதுபோலவே இந்திய விமானப்படையின் மிக்-29 விமானம் இன்று (8.5.2020) காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஜலந்தர் விமான தளத்திற்கு அருகே திடீரென விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால், அது கட்டுப்பாட்டை இழந்தது. விமான ஓட்டுனர் பத்திரமாக வெளியே குதித்து தப்பினார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x