Published : 08 May 2020 01:24 PM
Last Updated : 08 May 2020 01:24 PM

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் மோசமாக நடத்துகின்றன: மாயாவதி கண்டனம்

லக்னோ

உத்தர பிரதேசதத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விதம் தவறானது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:
‘‘உத்தர பிரதேசதத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான எந்த வசதியும் இல்லை. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. அவர்களை நடத்தும் விதமம் தவறானது.

அவர்களுக்கு சரியான உணவும், தங்குமிடமும் வழங்கப்படவில்லை. இதனால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீ்ட்டு வருவதற்கான நடவடிக்கைகளை உத்தர பிரதேச அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x