Published : 05 May 2020 09:52 PM
Last Updated : 05 May 2020 09:52 PM

கரோனாவுக்கு தடுப்பு மருந்து: தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள 30 இந்திய நிறுவனங்கள்

கரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவில் 30 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் சில பரிசோதனை நிலைக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்தியாவிலும் கரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல்வேறு மருந்து நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசின் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி, அதனுடைய தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவில் 30 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் சில பரிசோதனை நிலைக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x