

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 195 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸால் இதுவரை 46 ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,568 பேர் உயிரிழந்துள்ளனர். 12,726 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 32 ஆயிரத்து 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திங்கள்கிழமை மாலை வரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேற்கு வங்கத்தில் 98 பேர், மகாராஷ்டிராவில் 35 பேர், குஜராத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 6 பேர், உத்தரப் பிரதேசத்தில் 5 பேர், பஞ்சாபில் 2 பேர், சண்டிகர், ஹரியாணா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 29 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 98 பேர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லாததால் 64 ஆகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்ததால் 77 ஆகவும், தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 29 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 31 ஆகவும் அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆகவும், கர்நாடகாவில் 27 பேராகவும், ஆந்திராவில் 36 ஆகவும் அதிகரித்துள்ளது. பஞ்சாப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணாவில் 6 பேரும், பிஹாரில் தலா 4 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,541 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,465 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் 4,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,431 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 5,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3,061 பேரும், தமிழகத்தில் 3,550 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,409 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,942 பேரும், தெலங்கானாவில் 1,085பேரும், கேரளாவில் 500 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 462 பேர் குணமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் 2,766 பேர், ஆந்திராவில் 1,650 பேர், கர்நாடகாவில் 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 726 பேர், மேற்கு வங்கத்தில் 1,259 பேர், பஞ்சாப்பில் 1,233 பேர், ஹரியாணாவில் 517 பேர், பிஹாரில் 528 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்டில் 60 பேர், ஒடிசாவில் 169 பேர், சண்டிகரில் 102 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 41 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் 115 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 41 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மேகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசத்தில் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.