Published : 02 May 2020 04:48 PM
Last Updated : 02 May 2020 04:48 PM

‘‘விவசாயப் பொருட்கள் விற்பனை; விவசாயிகளுக்கு கடன் வழங்க கவனம் செலுத்துங்கள்’’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும், அவர்களுக்கு போதிய கடனுதவி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே துறை சார்ந்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் விவசாயத்துறை மீட்பு தொடர்பாக இன்று அவர் ஆலோசனை நடத்தினார்.

விவசாய துறை சார்ந்த உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் அவர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கரோனா ஊடங்கால் ஏற்பட்டுள்ள சூழல்கள், சவால்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும், அவர்களுக்கு போதிய கடனுதவி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதில் தற்போதுள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x